CCMC NEWS 3- 07.03.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.96க்குட்பட்ட சுந்தராபுரம் பகுதியில் மூலதன மானிய நிதி (CGF) திட்டத்தின்கீழ் ரூ.67.00 இலட்சம் மதிப்பீட்டில், புனரமைக்கப்பட்ட தக்காளி மார்க்கெட்டினை மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், ஆகியோர் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று (07.03.2024) திறந்து வைத்தார்கள். உடன் தெற்கு மண்டல தலைவர் திருமதி.ர.தனலட்சுமி, ஆளுங்கட்சித்தலைவர் திரு.கார்த்திகேயன், மாமன்ற உறுப்பினர் திரு.குணசேகரன், செயற்பொறியாளர் திரு.கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர் திரு.கனகராஜ், மண்டல சுகாதார அலுவலர் திரு.ஆண்டியப்பன், உதவி பொறியாளர்கள் திரு.சுந்தர்ராஜன், திரு.சபரிராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.