CCMC NEWS 4 - 20.09.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.6க்குட்பட்ட காளப்பட்டி, நேரு நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ரூ.87.50 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் அமையவுள்ள இடத்தினை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் உதவி ஆணையர் திரு.முத்துச்சாமி, உதவி செயற்பொறியாளர் திரு.ராஜேஸ்கண்ணா, மாமன்ற உறுப்பினர் திரு.விஜயகுமார், மண்டல சுகாதார அலுவலர் திரு.விஜயகுமார், உதவி பொறியாளர்கள் திரு.கணேசன், திரு.குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 20.09.2024.