CCMC NEWS 1- 01.10.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி, கிழக்கு மண்டலம், வார்டு எண்.53க்குட்பட்ட மசக்காளிபாளையம், ஹர்ஷா மஹால் திருமண மண்டபத்தில், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் "மக்களைத்தேடி மாநகராட்சி" சிறப்பு முகாமின் தொடர்ச்சியாக, ”சிறப்பு பட்டா மாறுதல்" முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள், இன்று (01.10.2024) குத்துவிளக்கேற்றி, துவக்கி வைத்தார். உடன் மாநகராட்சி துணை ஆணையாளர் திரு.க.சிவகுமார், கிழக்கு மண்டல குழுத்தலைவர் திருமதி.இலக்குமி இளஞ்செல்விகார்த்திக், உதவி இயக்குநர் (நிலஅளவைத்துறை) திரு.சரவணன், உதவி ஆணையர்கள் திரு.முத்துச்சாமி(கிழக்கு), திரு.துரைமுருகன்(மேற்கு), செயற்பொறியாளர் திரு.கருப்பசாமி, மாமன்ற உறுப்பினர் திரு.மோகன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 01.10.2024.