CCMC NEWS 1- 30.09.2024

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழிகாட்டுதலின்படி, காவிரிக்கரைகள் மற்றும் தமிழ்நாட்டின் நீர்நிலைகளில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணியின் கீழ் கோயம்புத்தூர் மாநகராட்சி, தெற்கு மண்டலம், வார்டு எண்.76க்குட்பட்ட தெலுங்குபாளையம், நொய்யல் ஆற்றின் இருகரைகளிலும் பனை விதைகள் பதிக்கும் பணியினை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள், துவக்கி வைத்து, பார்வையிட்டார். உடன் தோட்டக்கலை துணை இயக்குநர் திரு.சித்தார்த், உதவி இயக்குநர் திருமதி.நந்தினி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திருமதி.மல்லிகா, மாநகர தலைமைப்பொறியாளர் (பொ) திரு.முருகேசன், நகரமைப்பு அலுவலர் திரு.குமார், நகர்நல அலுவலர் மரு.கே.பூபதி, உதவி ஆணையர் (பொ) திரு.இளங்கோவன், ஆளுங்கட்சித்தலைவர் திரு.கார்த்திகேயன், மாமன்ற உறுப்பினர்கள் திரு.ராஜ்குமார், திருமதி.சிவசக்தி, திருமதி.வசந்தாமணி, உதவி செயற்பொறியாளர் திரு.கனகராஜ், தன்னார்வல அமைப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்
30.09.2024.