CCMC NEWS 10-6-2025

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இன்று (10.06.2025) சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காணொளிக்காட்சி வாயிலாக கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலம் வார்டு எண்.65க்குட்பட்ட காமராஜ் வீதியில் நூலக மேம்பாட்டு நிதி மூலதன முதலீட்டு நிதியின் கீழ் ரூ.22.00 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதலாக கட்டப்பட்ட நூலகத்தின் முதல் தளத்தினை திறந்து வைத்ததைத் தொடர்ந்து. மாண்புமிகு மேயர் திருமதி.கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள், பணிகள் குழுத் தலைவர் திருமதி.சாந்தி முருகன், மாவட்ட நூலக அலுவலர் திரு.ராஜேந்திரன், மாமன்ற உறுப்பினர் திருமதி.ராஜேஸ்வரி மேகநாதன், உதவி செயற்பொறியாளர் திருமதி.ஹேமலதா, உதவி பொறியாளர் திருமதி.மஞ்சுளா, சுகாதார ஆய்வாளர் திரு.ஜெகநாதன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.