CCMC NEWS 2 - 27.09.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி, வடக்கு மண்டலம், வார்டு எண்.3க்குட்பட்ட சரவணம்பட்டி, துடியலூர் சாலை முதல் சின்னவேடம்பட்டி சாலை வரை புதிதாக திட்ட சாலை அமையவுள்ள இடத்தினை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். உடன் மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் திரு.குமார், உதவி ஆணையர் திருமதி.ஸ்ரீதேவி, உதவி நகர திட்டமிடுநர் திருமதி.சத்யா, உதவி பொறியாளர் திரு.உத்தமன், நில அளவையர் திரு.ரமேஷ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 27.09.2024.