CCMC NEWS 3 - 30.09.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்குட்பட்ட அரங்கநாதபுரம் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று, ஆய்வு செய்து, மாணவ, மாணவியர்களுக்கு கபடி விளையாடுவதற்கு தேவையான வசதிகள் செய்துதர, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். உடன் உதவி ஆணையர் திரு.செந்தில்குமரன், மாமன்ற உறுப்பினர் திருமதி.வித்யா ராமநாதன், உதவி செயற்பொறியாளர் திருமதி.ஹேமலதா, மண்டல சுகாதார அலுவலர் திரு.குணசேகரன், உதவி பொறியாளர் திரு.குமரேசன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 30.09.2024.