CCMC NEWS 4 - 27.09.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி, பிரதான அலுவலகத்தில் இன்று (27.09.2024) நடைபெற்ற ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு தாட்கோ திட்டத்தின் கீழ் கடனுதவி பெறுவதற்கான வழிகாட்டுதல் சிறப்பு முகாமில், தமிழ்நாடு, தூய்மைப்பணியாளர் நல வாரிய அடையாள அட்டையினை தூய்மைப்பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், வழங்கினார். உடன் நகர்நல அலுவலர் மரு.கே.பூபதி, உதவி ஆணையர் திரு.செந்தில்குமரன், மாவட்ட மேலாளர் (தாட்கோ) திருமதி.கே.மகேஷ்வரி, மண்டல சுகாதார அலுவலர்கள் திரு.குணசேகரன், திரு.ராஜேந்திரன், திரு.முருகன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உள்ளனர்.