CCMC NEWS 4 - 28.09.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.27-க்குட்பட்ட பீளமேடு, குரும்பர் வீதி பகுதியில் மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு, அப்பகுதியில் புதிதாக மழைநீர் வடிகால் அமைப்பதற்கான உரிய திட்ட மதிப்பீடு தயாரிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். உடன் மாநகராட்சி துணை ஆணையாளர் திரு.க.சிவகுமார், வடக்கு மண்டல தலைவர் திரு.வே.கதிர்வேல், நகர்நல அலுவலர் மரு.கே.பூபதி, உதவி ஆணையர் திருமதி.ஸ்ரீதேவி, மாமன்ற உறுப்பினர் திருமதி.அம்பிகா தனபால், உதவி செயற்பொறியாளர் திரு.எழில், மண்டல சுகாதார அலுவலர் திரு.ராஜேந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 28.09.2024.