Skip to content

ccmc news 5 14.07.2026

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.59-க்குட்பட்ட சிங்காநல்லூர், பிருந்தாவன் கார்டன் பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவினை மாண்புமிகு மேயர் திருமதி.கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள், நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, சுற்றுச்சுவர் அமைக்க உரிய திட்டமதிப்பீடு தயாரிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். உடன் கிழக்கு மண்டல தலைவர் திருமதி.இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், கணக்குகள் குழுத்தலைவர் திருமதி.தீபா தளபதிஇளங்கோ, உதவி ஆணையர் திரு.தட்சிணாமூர்த்தி, உதவி செயற்பொறியாளர் திரு.இளங்கோவன்(பொ), சுகாதார ஆய்வாளர் திரு.செ.நவீன்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 14.07.2026.

