CCMC NEWS 5 - 30.09.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.68க்குட்பட்ட வடகோவை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று, பார்வையிட்டு, பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள பழுதடைந்த கட்டடத்தை புனரமைத்து, மாணவர்கள் பயன்பட்டிற்கு கொண்டுவர உரிய திட்டமதிப்பீடு தயாரித்து பணிகளை மேற்கொள்ள, சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு உத்தரவிட்டார். உடன் உதவி ஆணையர் திரு.செந்தில்குமரன், உதவி செயற்பொறியாளர் திருமதி.ஹேமலதா, மண்டல சுகாதார அலுவலர் திரு.குணசேகரன், உதவி பொறியாளர்கள் திரு.குமரேசன், திரு.நடராஜன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 30.09.2024.