CCMC NEWS 5.6.2025
.jpg)
கோயம்புத்தூர் மாநகராட்சி, வடக்கு மண்டலம், வார்டு எண். 20க்குட்பட்ட கணபதி மாநகர் பகுதியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வகையில், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாபெரும் மரக்கன்றுகள் நடும் பணியினை கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர்.கணபதி.ப.ராஜ்குமார் அவர்கள், மாண்புமிகு மேயர் திருமதி.கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், ஆகியோர் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள், இன்று (05.06.2025) துவக்கி வைத்து, மரக்கன்றுகளை நட்டு வைத்தார்கள். உடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.சங்கேத் பல்வந்த் வாகே இ.ஆ.ப., அவர்கள், மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன், துணை ஆணையாளர் திரு.த.குமரேசன், தலைமை பொறியாளர் திரு.விஜயகுமார், வடக்கு மண்டல குழுத்தலைவர் திரு.வே.கதிர்வேல், நகரமைப்பு அலுவலர் திரு.குமார், உதவி ஆணையர்கள் திரு.முத்துசாமி (பொ), திரு.குமரன், மாநகர கல்வி அலுவலர் திரு.சி.தாம்சன், உதவி நகர திட்டமிடுநர்கள், மாமன்ற உறுப்பினர் திரு.மரியராஜ், மாணவ, மாணவியர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.