CCMC NEWS 6 - 28.09.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம், வார்டு எண்.80க்குட்பட்ட ஒக்கிலியர் காலனி, மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற "கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமினை” மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து, 40 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பினையும் நடத்தி வைத்து, கர்ப்பிணி தாய்மார்களுக்கான ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் சீதனப்பொருட்களை வழங்கினார். உடன் மரியாதைக்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன் அவர்கள், பொது சுகாதாரக்குழு தலைவர் திரு.மாரிசெல்வன், நகர்நல அலுவலர் மரு.பூபதி, மண்டல சுகாதார அலுவலர் திரு.குணசேகரன், மண்டல மருத்துவ அலுவலர் மரு.தினேஷ் பெரியசாமி, சுகாதார அலுவலர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உ‌ள்ளன‌ர்