CCMC NEWS 7 - 30.09.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்குட்பட்ட காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் பகுதியில் பாதாள சாக்கடை அடைப்பினை ரோபோ இயந்திரம் மூலம் சரிசெய்யும் பணி நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார். உடன் உதவி ஆணையர் திரு.செந்தில்குமரன், மாமன்ற உறுப்பினர் திருமதி.வித்யா ராமநாதன், உதவி செயற்பொறியாளர் திருமதி.ஹேமலதா, மண்டல சுகாதார அலுவலர் திரு.குணசேகரன், உதவி பொறியாளர் திரு.குமரேசன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 30.09.2024.