CCMC NEWS 8 - 25.09.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி, கிழக்கு மண்டலம், வார்டு எண்.53க்குட்பட்ட காமராஜர் சாலை, மணிமஹால் திருமண மண்டபத்தில், ”மக்களைத்தேடி மாநகராட்சி” சிறப்பு முகாமினை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், மாண்புமிகு மேயர் திருமதி.கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள், இன்று (26.09.2024) குத்துவிளக்கேற்றி, துவக்கி வைத்தார். உடன் மரியாதைக்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன், துணை ஆணையாளர் திரு.கா.சிவகுமார், கிழக்கு மண்டல குழுத்தலைவர் திருமதி.இலக்குமி இளஞ்செல்விகார்த்திக், மாநகர தலைமைப்பொறியாளர் (பொ) திரு.முருகேசன், உதவி ஆணையர் திரு.முத்துச்சாமி, மாமன்ற உறுப்பினர்கள் திரு.மோகன், திருமதி.பாக்கியம், திரு.நவீன்குமார், திரு.தர்மராஜ், செயற்பொறியாளர் திரு.கருப்பசாமி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்.