CCMC NEWS 8 - 30.09.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.48க்குட்பட்ட டாடாபாத், ராதாகிருஷ்ணன் சாலையில் அமைந்துள்ள மாநகராட்சி இடத்தில் மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதியில் புதிதாக வணிக வளாகம் அமைக்க உரிய திட்டமதிப்பீடு தயாரிக்க சம்பந்தப்பட்ட பொறியாளரிடம் உத்தரவிட்டார். உடன் உதவி ஆணையர் திரு.செந்தில்குமரன், மாமன்ற உறுப்பினர் திருமதி.பிரபா ரவீந்திரன், உதவி செயற்பொறியாளர் திருமதி.ஹேமலதா, மண்டல சுகாதார அலுவலர் திரு.குணசேகரன், உதவி பொறியாளர் திரு.குமரேசன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 30.09.2024.