CCMC NEWS 9-6-2025

கோயம்புத்தூர் மாநகராட்சி, வடக்கு மண்டலம், வார்டு எண்.1-க்குட்பட்ட துடியலூர், ஸ்ரீகாந்த் நகர், சாரளா கார்டன், வளர்மதி நகர் உள்ளிட்ட 10 இடங்களில் ரூ.1.29 கோடி மதிப்பீட்டில் சாலைகள் புதுப்பித்தல் பணிகள் மேற்கொள்வது குறித்து மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று, ஆய்வு மேற்கொண்டு, சாலை சீரமைக்கும் பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். உடன் உதவி ஆணையர் திரு.முத்துசாமி, உதவி செயற்பொறியாளர் திரு.முத்துக்குமார், மாமன்ற உறுப்பினர் திருமதி.கற்பகம், உதவி பொறியாளர் திரு.ஜெயின்ராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 09.06.2025,