Skip to content

CCMC NEWS1 16.7.2025

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.15க்குட்பட்ட சுப்பிரமணியம்பாளையம், எஸ்.எம்.ஆர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமினை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், இன்று (16.07.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் வடக்கு மண்டல தலைவர் திரு.வே.கதிர்வேல், நகர்நல அலுவலர் மரு.ஏ.மோகன், உதவி ஆணையர் திரு.முத்துசாமி, உதவி செயற்பொறியாளர் திரு.முத்துக்குமார், மாமன்ற உறுப்பினர்கள் திருமதி.சாந்தாமணி, திருமதி.சித்ரா, கோயம்புத்தூர் வடக்கு வட்டாட்சியர் திரு.விஜயரங்கன், உதவி நகர திட்டமிடுநர் திருமதி.சத்யா, மண்டல சுகாதார அலுவலர் திரு.முருகன், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் உள்ளனர்.