CCMC NEWS1 18.7.2025

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.2 மற்றும் 14க்குட்பட்ட பகுதிகளிலுள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வெள்ளக்கிணறு, ஆதி திருமண மண்டபத்தில் நடைபெற்ற ”உங்களுடன் ஸ்டாலின்" சிறப்பு முகாமில் மாண்புமிகு மேயர் திருமதி.கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு முகாமினை பார்வையிட்டார். உடன் வருவாய் கோட்டாட்சியர் திரு.கோவிந்தன், மண்டலத் தலைவர் திரு.வே.கதிர்வேல், உதவி ஆணையர் திரு.முத்துச்சாமி, உதவி செயற்பொறியாளர் திரு.முத்துக்குமார், மாமன்ற உறுப்பினர்கள் திருமதி.புஷ்பமணி, திருமதி.சித்ரா, திருமதி.சுமதி, திருமதி.சாந்தாமணி, உதவி நகர திட்டமிடுநர் திருமதி.சத்யா, மண்டல சுகாதார அலுவலர் திரு.முருகன், உதவி பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட அனைத்து துறை அலுவலர்கள் உள்ளனர் 18.07.2025.