CCMC NEWS1 28.7.2025

கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.87க்குட்பட்ட பாலக்காடு சாலை,சாய் கார்டன், அன்னம்மா நாயக்கர் வீதி பகுதியில் தூய்மைப் பணியாளர்கள் மூலம் மக்கும் குப்பை மற்றும் மக்கா குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று, பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். உடன் தலைமைப் பொறியாளர் திரு.விஜயகுமார், உதவி நகர்நல அலுவலர் மரு.பூபதி, நகரமைப்பு அலுவலர் திரு.குமார், உதவி ஆணையர் திரு.குமரன், உதவி செயற்பொறியாளர் திரு.கனகராஜ், உதவி நகர திட்டமிடுநர் திரு.மகேந்திரன், மாமன்ற உறுப்பினர் திரு.பாபு, மண்டல சுகாதார அலுவலர் திரு.ஆண்டியப்பன், SWMS ஒப்பந்த நிர்வாகி திரு.வெங்கடேஷ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 28.07.2025.