Skip to content

CCMC NEWS2 2.8.2025

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம், வார்டு எண்.33க்குட்பட்ட கவுண்டம்பாளையம் பிருந்தாவன் நகர் பகுதியில் தூய்மைப் பணியாளர்கள் மூலம் மக்கும் குப்பை மற்றும் மக்கா குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதையும் மற்றும் தூய்மைப் பணியாளர்களின் வருகைப் பதிவேடுகளையும் மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று, பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். உடன் உதவி நகர்நல அலுவலர் மரு.பூபதி, நகரமைப்பு அலுவலர் திரு.ராஜசேகரன், உதவி ஆணையர் திரு.துரைமுருகன், மண்டல சுகாதார அலுவலர் திரு.வீரன், உதவி பொறியாளர் திரு.ராஜேஸ்வேணுகோபால், சுகாதார ஆய்வாளர் திரு.ரமேஷ், SWMS ஒப்பந்த நிர்வாகி திரு.வெங்கடேஷ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 02.08.2025.