CCMC NEWS2 7-7-2025

கோயம்புத்தூர் மாநகராட்சி, வடக்கு மண்டலம், வார்டு எண். 10க்குட்பட்ட சத்தி சாலை, சரவணம்பட்டி, பெரிய வீதி பகுதியில், மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் குடியிருப்பு பகுதிகளில் மக்கும் குப்பை மற்றும் மக்கா குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று, பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். உடன் உதவி நகர்நல அலுவலர் மரு.பூபதி, உதவி செயற்பொறியாளர் திரு.முத்துக்குமார், மண்டல சுகாதார அலுவலர் திரு.முருகன், உதவி பொறியாளர்கள் திரு.சக்திவேல், திரு.உத்தமன், சுகாதார ஆய்வாளர் திரு.லோகநாதன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 07.07.2025.