CCMC NEWS2 9-7-2025

கோயம்புத்தூர் மாநகராட்சி, மேற்கு மண்டலம், வார்டு எண்.42-க்குட்பட்ட கோவில் மேடு, திலகர் நகர் பகுதியில், சாலையோரங்களில் கொட்டப்பட்டுள்ள குப்கைகளை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, சாலையோரங்களில் கொட்டப்படும் குப்பைகளை சிசிடிவி பொருத்தி கண்காணித்திடவும் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடவும் அலுவலருக்கு அறிவுறுத்தினார். உடன் தலைமைப் பொறியாளர் திரு.விஜயகுமார், உதவி ஆணையர் திரு.துரைமுருகன், மாமன்ற உறுப்பினர் திரு.பிரவீன்ராஜ், மண்டல சுகாதார அலுவலர் திரு.வீரன், உதவி பொறியாளர்கள் திருமதி.நித்யா, திரு.நாகராஜ், சுகாதார ஆய்வாளர் திரு.சலைத் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 09.07.2025.