CCMC NEWS3 14-7-2025

கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம், பொள்ளாச்சி சாலை, சுந்தராபுரம் பகுதியில் தூய்மைப் பணியாளர்களின் நலனை காக்கும் வகையில், வெயில் மற்றும் மழைக்காலங்களில் பயன்படுத்துவதற்காக, கைகளில் பிடிக்காதவாறு, தோள்பட்டையில் அணிந்து கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்ட ஐபெர்லா குடையின் செயல்முறை குறித்து (DEMO) மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் உதவி நகர்நல அலுவலர் மரு.பூபதி, உதவி ஆணையர் திரு.குமரன், உதவி செயற்பொறியாளர் திரு.கனகராஜ், மண்டல சுகாதார அலுவலர் திரு.ஆண்டியப்பன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 14.07.2025.