CCMC NEWS3 29.5.2025

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண். 1க்குட்பட்ட அப்பநாயக்கன்பாளையம் முதல் கணுவாய் சாலை வரையிலான மாநகராட்சியில் குடிநீர் திட்டம் மற்றும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளுக்காக சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, சாலை சீரமைக்கும் பணிகளை உடனடியாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். உடன் தலைமைப் பொறியாளர் திரு.விஜயகுமார், உதவி ஆணையர் திரு.முத்துசாமி, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப்பொறியாளர் திரு.ஹரிகிருஷ்ணன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர் திரு.தமிழ்செல்வன், உதவி நிர்வாக பொறியாளர் திருமதி.மஞ்சுளா, செயற்பொறியாளர் திரு.பத்மநாபன், மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் திரு.முத்துக்குமார், மாமன்ற உறுப்பினர் திருமதி.கற்பகம், உதவி பொறியாளர் திரு.திருமூர்த்தி, சுகாதார ஆய்வாளர்கள் திரு.விஜயகுமார், திரு.பவுன்ராஜ் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர் 29.05.2025.