CCMC NEWS 1-18.3.2025

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.6க்குட்பட்ட திருமுருகன் நகர் பகுதியில் பில்லூர் - III குடிநீர் திட்டத்தின் கீழ் (அம்ரூத்) வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் உதவி ஆணையர் திரு.முத்துச்சாமி, செயற்பொறியாளர் திரு.கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர் திரு.ராஜேஸ்கண்ணா, மாமன்ற உறுப்பினர் திரு.பொன்னுசாமி, உதவி பொறியாளர் திரு.குமார், மண்டல சுகாதார அலுவலர் திரு.சந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 18.03.2025.