CCMC NEWS 18-3-2025

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.2க்குட்பட்ட துடியலூர், சேரன் காலனி பகுதியில் பில்லூர் - III குடிநீர் திட்டப்பணிகள் (அம்ரூத்) குறித்து மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு வழங்கப்படும் குடிநீர் விநியோகம் தொடர்பாக அலுவலர்களிடம் கேட்டறிந்தார். உடன் உதவி ஆணையர் திரு.முத்துச்சாமி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் திரு.செந்தில்குமார், மாமன்ற உறுப்பினர்கள் திருமதி.புஷ்பமணி, திருமதி.கற்பகம், உதவி செயற்பொறியாளர்கள் திரு.முத்துக்குமார், திருமதி.ராதா(த.கு.வ.வா), மண்டல சுகாதார அலுவலர் திரு.முருகன், உதவி பொறியாளர்கள் திரு.உத்தமன், திரு.ஜெயின்ராஜ், சுகாதார ஆய்வாளர் திரு.பவுன்ராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 18.03.2025.