CCMC NEWS 2-7-2025

கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலம் வார்டு எண்.68-க்கு உட்பட்ட வடகோவை பவர் ஹவுஸ் மற்றும் 100 அடி சாலை ஆகிய பகுதிகளில் உள்ள தெருவிளக்குகளின் செயல்பாடுகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள் இன்று (01.07.2025) இரவு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, எரியாத தெருவிளக்குகளை உடனடியாக சரி செய்ய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். உடன் தலைமை பொறியாளர் திரு.விஜயகுமார், உதவி ஆணையர் திரு.செந்தில்குமரன், உதவி செயற்பொறியாளர் திருமதி.ஹேமலதா, உதவி பொறியாளர் திரு.நடராஜன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.