CCMC NEWS 21-3-2025

கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அவிநாசி சாலை கோல்டு வின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரையில் அமைக்கப்பட்டு வரும் உயர்மட்ட பாலத்தின் கீழ் பகுதியின் இரு புறங்களில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் புதிதாக பயணிகள் நிழற்குடை அமைப்பது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் உதவி ஆணையர்கள் திரு.செந்தில்குமரன், திரு.முத்துச்சாமி, நகரமைப்பு அலுவலர் திரு.குமார், உதவி நகர திட்டமிடுநர் திரு.கோவிந்த பிரபாகரன், திருமதி.புவனேஸ்வரி, உதவி செயற்பொறியாளர் திருமதி.ஹேமலதா, நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் திருமதி.நந்தினி, இளம்பொறியாளர் திரு.கார்த்திகேயன், மாநகராட்சி உதவி பொறியாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 21.03.2025.