CCMC NEWS 22-3-2025

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.35-க்குட்பட்ட தடாகம் சாலை, இடையர்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் உலக தண்ணீர் தினத்தினை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்கும் பணியினை மாண்புமிகு மேயர் திருமதி.கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், ஆகியோர் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள், துவக்கி வைத்து பார்வையிட்டார். உடன் மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன் அவர்கள், மேற்கு மண்டல தலைவர் திருமதி.கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை, உதவி ஆணையர் திரு.துரைமுருகன், மாமன்ற உறுப்பினர்கள் திரு.சம்பத், திரு.தமிழ்ச்செல்வன், உதவி செயற்பொறியாளர் திருமதி.சவிதா, உதவி பொறியாளர் திரு.ராஜேஸ்வேணுகோபால் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 22.03.2025.