CCMC NEWS 25-3-2025

கோயம்புத்தூர் மாநகராட்சி, வடக்கு மண்டலம், வார்டு எண்.29க்குட்பட்ட சத்தி சாலை, கட்டபொம்மன் வீதி பகுதியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மற்றும் சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்வது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், மாண்புமிகு மேயர் திருமதி.கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் வடக்கு மண்டல தலைவர் திரு.வே.கதிர்வேல், உதவி ஆணையர் திரு.முத்துச்சாமி, உதவி செயற்பொறியாளர்கள் திரு.எழில், திரு.முத்துக்குமார், மண்டல சுகாதார அலுவலர் திரு.முருகன், உதவி பொறியாளர்கள் திரு.சக்திவேல், திரு.ரவிக்கண்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 25.03.2025.