CCMC NEWS 28.4.2025

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம், காந்திபுரம் மத்திய சிறைச்சாலை வளாகத்தில் முதற்கட்டமாக சுமார் 45 ஏக்கர் பரப்பளவில் ரூ.167.25 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுவரும் செம்மொழிப்பூங்கா கட்டுமானப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குநர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள், இன்று (28.04.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். உடன் மாநகராட்சி துணை ஆணையாளர் திரு.த.குமரேசன், தலைமை பொறியாளர் திரு.விஜயகுமார், உதவி ஆணையாளர் திரு.செந்தில்குமரன், செயற்பொறியாளர் திரு.இளங்கோவன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) திரு.சத்யவிஜயன், உதவி செயற்பொறியாளர் திருமதி.ஹேமலதா, உதவி பொறியாளர் திரு.கமலக்கண்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.