CCMC NEWS 29.5.2025

கோயம்புத்தூர் மாநகராட்சி, மேற்கு மண்டலம், பூசாரிபாளையம் சாலை, வீரகேரளம் பகுதியில் உள்ள கிருஷ்ணம்பதி குளத்திற்கு நொய்யல் ஆற்றிலிருந்து வரும் நீர்வரத்து குறித்து மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, குளத்திற்கு வரும் நீர்வரத்து குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். உடன் உதவி ஆணையர் திரு.துரைசாமி, உதவி செயற்பொறியாளர் திருமதி.சவிதா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 29.05.2025.