Skip to content

CCMC NEWS 3-19.3.2025

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.65க்குட்பட்ட பீளமேடு பிரதான சாலை, தேர்வீதி, சவுரிபாளையம் பகுதியில் சாலை விரிவாக்கப் பணிகள் மேற்கொள்வது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் உதவி ஆணையர் திரு.முத்துச்சாமி, செயற்பொறியாளர் திரு.கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர்கள் திரு.ராஜேஸ்கண்ணா, திரு.எழில், மாமன்ற உறுப்பினர் திருமதி.அம்சவேணி, உதவி நகர திட்டமிடுநர் திருமதி.புவனேஸ்வரி, மண்டல சுகாதார அலுவலர்கள் திரு.சந்திரன், திரு.ராஜேந்திரன், உதவி பொறியாளர்கள் திரு.கல்யாணசுந்தரம், திரு..ஃபர்மான்அலி, திரு.ரவிக்கண்ணன், திரு.கணேசன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 19.03.2025.