CCMC NEWS 30-6-2025

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம், மருதமலை சாலை, வடவள்ளி பகுதியில் உள்ள சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில், பணியாளர்களின் வருகை பதிவேட்டினை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று, பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். உடன் மேற்கு மண்டல தலைவர் திருமதி.கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை, மாநகர தலைமைப் பொறியாளர் திரு.விஜயகுமார், உதவி ஆணையர் திரு.துரைமுருகன், உதவி நகர்நல அலுவலர் மரு.கே.பூபதி, உதவி செயற்பொறியாளர் திருமதி.சவிதா, மாமன்ற உறுப்பினர்கள் திருமதி.குமுதம் குப்புசாமி, திருமதி.பத்மாவதி, உதவி நகர திட்டமிடுநர் திரு.மகேந்திரன், மண்டல சுகாதார அலுவலர் திரு.வீரன், உதவி பொறியாளர் திருமதி.விமலா, சுகாதார ஆய்வாளர் திரு.ராஜேந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 30.06.2025.