CCMC NEWS 3.6.2025

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம், காந்திபுரம் மத்திய சிறைச்சாலை வளாகத்தில் முதற்கட்டமாக சுமார் 45 ஏக்கர் பரப்பளவில் ரூ.167.25 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுவரும் செம்மொழிப்பூங்கா கட்டுமானப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், இன்று (03.06.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். உடன் மாநகராட்சி துணை ஆணையாளர் திரு.த.குமரேசன், தலைமைப் பொறியாளர் திரு.விஜயகுமார், உதவி ஆணையர் திரு.செந்தில்குமரன், துணை மாநகரப்பொறியாளர் திரு.இளங்கோவன், உதவி செயற்பொறியாளர் திருமதி.ஹேமலதா, உதவி நகர திட்டமிடுநர் திரு.கோவிந்த பிரபாகரன், உதவி பொறியாளர் திரு.கமலக்கண்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.