CCMC NEWS 4.6.2025

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், இன்று (04.06.2025) உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், தெற்கு மண்டலம் போத்தனூர் பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் ரூ.591.14 கோடி மதிப்பீட்டில், பாலக்காடு, ரயில்வே பாதைக்கு மேலேயும் பொள்ளாச்சி ரயில்வே பாதைக்கு கீழ்பகுதியிலும் பாலம் அமைத்து, கோயம்புத்தூர் மாநகராட்சிக்கான குறிச்சி குனியமுத்தூர் குடிநீர் திட்டம் மற்றும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணியினை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். உடன் உதவி ஆணையர் திரு.குமரன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் திரு.முத்துசாமி, உதவி நிர்வாக பொறியாளர்கள் திருமதி.கீதாதேவி, திருமதி. மஞ்சுளா, மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் திரு.கனகராஜ், ஆளுங்கட்சித்தலைவர் திரு.கார்த்திகேயன், மாமன்ற உறுப்பினர்கள் திரு.அஸ்லாம்பாஷா, திரு.உதயகுமார், மண்டல சுகாதார அலுவலர் திரு.ஆண்டியப்பன், உதவி பொறியாளர் திரு.பத்மநாபன்(த.கு.வ.வா) மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்.