CCMC NEWS 7 - 25.09.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம், வார்டு எண்.63க்குட்பட்ட இராமநாதபுரம், பகுதியில் சூயஸ் 24 மணி நேர குடிநீர் திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று, ஆய்வு செய்து, பணிகளை விரைவில் முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். உடன் பணிகள் குழு தலைவர் திருமதி.சாந்தி முருகன், உதவி ஆணையர் திரு.செந்தில்குமரன், செயற்பொறியாளர் திரு.கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர் திருமதி.ஹேமலதா, மண்டல சுகாதார அலுவலர் திரு.குணசேகரன், உதவி பொறியாளர்கள் திரு.நடராஜ், திரு.சக்திவேல், திரு.பாலச்சந்தர், சுகாதார ஆய்வாளர் திரு.ஜெகநாதன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 25.09.2024.