CCMC NEWS 7.5.2025

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள் மற்றும் மாவட்ட வன அலுவலர் திரு.ஜெயராஜ் இ.வ.ப., அவர்கள் ஆகியோர், இன்று (07.05.2025) மத்திய மண்டலம் பந்தயச்சாலை பகுதியில் அமைந்துள்ள மாவட்ட வன அலுவலர் முகாம் அலுவலக வளாகத்தில் இருந்து, வெள்ளலூர் உரக்கிடங்கு வளாகத்தில் நடுவதற்காக வனத்துறையின் சார்பில் பெறப்பட்ட மரக்கன்றுகளை அனுப்பி வைக்கும் பணிகளை பார்வையிட்டார்கள். உடன் உதவி ஆணையர் திரு.செந்தில்குமரன், உதவி செயற்பொறியாளர்கள் திரு.கனகராஜ், திருமதி.ஹேமலதா, கோவை வனச்சரக அலுவலர் திரு.திருமுருகன், வனவர்கள் திரு.தியாகு, திரு.ஜெயப்பிரகாஷ், சிறுதுளி அமைப்பு நிர்வாகி திரு.சின்னசாமி, சுகாதார ஆய்வாளர்கள் திருமதி.ஜெயப்பார்வதி, திரு.சரவணக்குமார் உள்ளிட்ட பலர் உள்ளனர்.