CCMC NEWS1 1-7-2025
.jpg)
கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம், வார்டு எண். 78க்குட்பட்ட பேரூர் சாலை, செல்வபுரம், என்.எஸ்.கே.வீதி பகுதிகளில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் குடியிருப்பு பகுதிகளில் மக்கும் குப்பை மற்றும் மக்கா குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று, பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, குடியிருப்பு பகுதிகளில் குப்பைகள் தேங்காதவாறு உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். உடன் உதவி நகர்நல அலுவலர் மரு.கே.பூபதி, துணை மாநகரப்பொறியாளர் திரு.இளங்கோவன், உதவி ஆணையர் திரு.குமரன், உதவி செயற்பொறியாளர் திரு.கனகராஜ், மாமன்ற உறுப்பினர் திருமதி.சிவசக்தி, மண்டல சுகாதார அலுவலர் திரு.ஆண்டியப்பன், உதவி பொறியாளர்கள் திரு.கோபாலகிருஷ்ணன், திரு.சத்தியமூர்த்தி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 01.07.2025.