CCMC NEWS1 16.4.2025

கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.97க்குட்பட்ட சுந்தராபுரம், கோண்டி காலனி பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், இன்று (16.04.2025) நேரில் சென்று, பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். உடன் மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன், உதவி உதவி ஆணையர் திரு.குமரன், மாநகர கல்வி அலுவலர் திரு.சி.தாம்சன், செயற்பொறியாளர் திரு.இளங்கோவன், உதவி செயற்பொறியாளர் திரு.கனகராஜ், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய உதவி நிர்வாக பொறியாளர் திரு.ரமேஷ், ஆளுங்கட்சித்தலைவர் திரு.கார்த்திகேயன், மாமன்ற உறுப்பினர்கள் திரு.அஸ்லம்பாஷா, திரு.செந்தில்குமார், மண்டல சுகாதார அலுவலர் திரு.ஆண்டியப்பன், உதவி பொறியாளர் திரு.சபரிராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.