CCMC NEWS1 16.5.2025

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம், வார்டு எண்.79க்குட்பட்ட ஏ.கே.எஸ் நகர் பகுதியில் 24 மணி நேர குடிநீர் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி மற்றும் குளோரின் கட்டிடங்களை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் தலைமைப் பொறியாளர் திரு.விஜயகுமார், நகரமைப்பு குழுத்தலைவர் திரு.சந்தோஷ், உதவி செயற்பொறியாளர்கள் திரு.எழில், திருமதி.சவிதா, மண்டல சுகாதார அலுவலர் திரு.வீரன், உதவி பொறியாளர்கள், சூயஸ் நிறுவன அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 16.05.2025.