Skip to content

CCMC NEWS1 25.4.2025

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம், வார்டு எண்.70க்குட்பட்ட சீதாலட்சுமி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிதாக டயாலிஸிஸ் மையம் மற்றும் சிறப்பு மகப்பேறு மருத்துவ சிகிச்சை மையம் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று, ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். உடன் உதவி ஆணையர் திரு.செந்தில்குமரன், நகர்நல அலுவலர் மரு.ஏ.மோகன், உதவி நகர்நல அலுவலர் மரு.பூபதி, உதவி செயற்பொறியாளர் திருமதி.ஹேமலதா, மண்டல சுகாதார அலுவலர் திரு.குணசேகரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 25.04.2025.