CCMC NEWS1 28-6-2025

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.68க்குட்பட்ட காந்திபுரம், கிராஸ்கட் பிரதான சாலை பகுதியில், மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம் குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பைகள் என வகைப்படுத்தி தரம் பிரித்து கொடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டுமென தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவுறை வழங்கினார். உடன் உதவி நகர்நல அலுவலர் மரு.கே.பூபதி, உதவி ஆணையர் திரு.செந்தில்குமரன், மண்டல சுகாதார அலுவலர் திரு.குணசேகரன், சுகாதார ஆய்வாளர் திரு.சரவணக்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 28.06.2025.