CCMC NEWS1 28.4.2025

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் காந்திபுரம் அனுப்பர்பாளையம் பகுதியில் ரூ.300.00 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் தந்தை பெரியார் நூலகத்தினை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குநர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள், இன்று (28.04.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மாநகராட்சி துணை ஆணையாளர் திரு.த.குமரேசன், தலைமை பொறியாளர் திரு.விஜயகுமார், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் திரு.செல்வராஜ், உதவி ஆணையாளர் திரு.செந்தில்குமரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) திரு.சத்யவிஜயன், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் ஆகியோர் உள்ளனர்.