CCMC NEWS1 28.5.2025

கோயம்புத்தூர் மாநகராட்சி, வடக்கு மண்டலம் வார்டு எண். 14க்குட்பட்ட ஜி.என்.மில், அமர்ஜோதி நகர் பகுதியில் பாதாள சாக்கடைத்திட்டப்பணிகள் முடிவுற்ற இடத்தினை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதியில் புதிதாக தார்சாலை அமைக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். உடன் உதவி ஆணையர் திரு.முத்துசாமி, உதவி செயற்பொறியாளர்கள் திரு.முத்துக்குமார், திருமதி.கீதாதேவி(த.கு.வ.வா), திருமதி.மஞ்சுளாதேவி(த.கு.வ.வா), திரு.சிவஜோதி(த.கு.வ.வா), மாமன்ற உறுப்பினர் திருமதி.சித்ரா தங்கவேல், மண்டல சுகாதார அலுவலர் திரு.முருகன், சுகாதார ஆய்வாளர் திரு.பவுன்ராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 28.05.2025.