CCMC NEWS12 24.5.2025

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் (Integrated Command & Control Centre) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், ஆகியோர் முன்னிலையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குநர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள், இன்று (24.05.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். உடன் மாநகராட்சி துணை ஆணையாளர்கள் திரு.த.குமரேசன், திருமதி.அ.சுல்தானா, தலைமைப் பொறியாளர் திரு.விஜயகுமார், உதவி ஆணையர் திரு.துரைசாமி, உதவி செயற்பொறியாளர் திருமதி.சவிதா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.