CCMC NEWS2 16-6-2025
.jpg)
கோயம்புத்தூர் மாநகராட்சி, கிழக்கு மண்டலம், வார்டு எண்.6-க்குட்பட்ட கருப்பராயன்பாளையம் மாநகராட்சி பள்ளி வளாகத்தில், சுதந்திர தின பங்களிப்பு நிதியிலிருந்து ரூ.14.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட மையத்தினை (ICDS) மாண்புமிகு மேயர் திருமதி.கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் முன்னிலையில், கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் கணபதி ப.ராஜ்குமார் அவர்கள், இன்று (18.06.2025) திறந்து வைத்தார். உடன் கிழக்கு மண்டல தலைவர் திருமதி.இலக்குமி இளஞ்செல்விகார்த்திக், உதவி ஆணையர் திரு.முத்துச்சாமி, உதவி செயற்பொறியாளர் திரு.ராஜேஸ்கண்ணா, மாமன்ற உறுப்பினர்கள் திரு.பொன்னுசாமி, திரு.கோவிந்தராஜ், திரு.மணியன், மண்டல சுகாதார அலுவலர் திரு.சந்திரன், உதவி பொறியாளர் திரு.குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.