CCMC NEWS2 21.4.2025

கோயம்புத்தூர் மாநகராட்சி, தெற்கு மண்டலம் வார்டு எண்.85க்குட்பட்ட குறிச்சி, விநாயகர் நகர், காந்திஜி சாலை பகுதியில் சேதமடைந்த சாலையினை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், இன்று (21.04.2025) நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, சாலைப் பணியினை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். உடன் மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன், தெற்கு மண்டல குழுத்தலைவர் திருமதி.ரெ.தனலட்சுமி, உதவி ஆணையர் திரு.குமரன், செயற்பொறியாளர் திரு.இளங்கோவன், உதவி செயற்பொறியாளர் திரு.கனகராஜ், மண்டல சுகாதார அலுவலர் திரு.ஆண்டியப்பன், உதவி பொறியாளர் திருமதி.சரண்யா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.