CCMC NEWS2 30.5.2025

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறைக்கு பின்பு, பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு, பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக, மேற்கு மண்டலம் பி.என்.புதூர் மாநகராட்சி தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளியில் மாண்புமிகு மேயர் திருமதி.கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, சத்துணவுக்கூடத்தில் உணவுப்பொருட்களின் இருப்பு குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். உடன் மாமன்ற உறுப்பினர் திருமதி.சாந்தி, சுகாதார அலுவலர் திரு.வீரன் மற்றும் சுகாதார ஆய்வாளர் திரு.சலைத் ஆகியோர் உள்ளனர் 30.05.2025..